ஞான விளக்கம்
ஒரு பழத்திற்காக முருகன் கோபித்தாரா?
இந்து மதம் தன்னுள் பல்வேறு தத்துவப் புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது.
மிகச் சரியாக அந்தப் புதையல்களைக் கண்டெடுத்தவர்களை தான் நாம் ஞானிகள்
என்று கொண்டாடி வருகிறோம். அற்புதமான சிந்தனைகளை செறிவு மிக்க தத்துவங்களை
சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்காகவே அவை கதை வடிவில் சொல்லப்பட்டன.
பழம் கிடைக்காமல் போன சாதாரண விஷயத்திற்கு யாராவது கோபப்படுவார்களா? என்ன
சொல்கிறது பழநி முருகனின் கதை?
ஞானம்
அடைதலின் இரண்டு வழிகளை அந்த நிகழ்வு அடையாளம் காட்டுகிறது. அம்மையும்
அப்பனும் இருக்கின்ற இடம் விட்டு நகராது. பிரம்மச்சரியம் காத்து இறையோடு
இணைந்து நிற்றல் பிள்ளையார் வழி.
உலக விஷயங்களில் உழன்று, உலக
விஷயங்களைச் சுற்றி வந்து அனுபவித்து, பின் இறைத் தேடலில் ஞானம் கேட்டு
வரும் போது ஒரு மெல்லிய பிணக்கு அங்கே வருகிறது. இது இப்போது உனக்கு
வேண்டாம். உள்ளே விஷயக் குவியல் இருக்கிறது. தனியே ஓடு. குன்று தேடி நில்.
உற்று உற்று உள்ளே பார்த்து அவற்றிலிருந்து விலகி நில். தவம் செய். நீ
ஞானத்தைத் தேடி எங்கேயும் ஓட வேண்டியதில்லை. அந்தப் பழம் ஞானப் பழம் நீயே.
நீயே அதுவாகி மலர்ந்து நிற்பாய் என்பது தான் நம் தமிழ் கடவுள் முருக
பெருமானின் முதல் படை வீடாம் பழநியின் கதை நண்பர்களே......
No comments:
Post a Comment